Top News

ஓய்வூதியம் வழங்கிடகோரி சமுக நலத்துறை ஊர் நல அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் ஒருகிணைந்த குழந்தை வளச்சி திட்ட அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக மறியல் போராட்டம்

  
  1979-1980ஆம் ஆண்டுமுதல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அங்கன்வாடி பணியாளராக பணிநியமனம் செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்கு மேல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது 1.4.2003-க்கு பின்னர் மகளிர் ஊர்நல அலுவலராக மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட கோரி 12-02-2021 அன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக சமுகநலத்துறை ஊர்நலஅலுவலர்கள்,மேற்ப்பார்வையாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஒன்று இணைந்து மறியல்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து ஒடாய் தேய்ந்துபோன எங்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடகோரி பல முறை தலைமைசெயலகத்திலும் எங்கள் துறைசார்ந்த ஆணையரகத்திலும்  20க்கும் மேலான மனுக்கள் கொடுத்தும் பலனின்றி போனதால் எங்கள் துறை மீது செவிசாய்க்காத அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இப்போராட்டம் பொதுச்செயலாலர் ரஞ்சிதம் தலைமையில் நடைப்பெற்றது. போராட்டத்தில் சுமார் 80 பெண்கள்   கலந்துகொண்டனர். போராட்டகாரர்களை காவல்துறையினர் கைதுசெய்து திருமணமண்டபத்தில் அடைத்துவைத்து மாலை சுமார் 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

                       கோரிக்கை

1.  1.4.2003-க்கு பின்னர் மகளிர் ஊர்நல அலுவலராக மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு ஆணையின்படி அங்கன்வாடி பணியில் பணிபுரிந்த காலத்தினை 50% விழுக்காடு எடுத்துக்கொண்டு ஓய்வூதிய பலன்கள் வழங்கக் கோருகிறோம்.

2. சிறப்பு ஓய்வூதியம் 2000/- என்பதை முறையான ஓய்வூதியமாக மாற்றி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலங்கள் பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்தே கணக்கிட்டு வழங்ககோருகிறோம்

Post a Comment

புதியது பழையவை