திறன் வளர்ச்சி பயிற்சி குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது

 

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்  29.08.2021 காலை 10 மணி முதல் மாலை மணி வரை குழந்தை  உரிமை பாதுகாப்பு தோழமை  கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி  பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி  இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் தலைமையிலும், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் முன்னிலையில் ACDS நிறுவனத்தின் இயக்குனர் திரு தேவன்பு அவர்கள் பயிற்சி அளித்தார். 

இப்பயிற்சியில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் CRPF செயல்பாடுகள் மற்றும் 

பாதுகாப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைத் தொழிலாளர் (ஒழுங்குமுறை) மற்றும் (முறைப்படுத்துதல்) சட்டம் போன்ற சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி விரிவாக அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர்
திருசுரேஷ் அவர்கள் கிராம அளவில் குழந்தைகளுக்காக உள்ள வளங்கள், வாய்ப்புகள்,குழந்தைகளுக்கான பிரச்சினைகள் எவ்வாற கண்டுபிடிப்பது மற்றும் எப்படி சரிசெய்வதுபற்றியும்விரிவாகஎடுத்துரைத்தார் தன்பின் குழந்தை உரிமைபாதுகாப்புகுழு பங்கேற்பாளர்கள்அடுத்தமூன்று ண்டுகள் தங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கான செயல்திட்டம் குறித்து திட்ட வரைவுரை செய்தனர் இறுதியாக குழந்தை உரிமை பாதுகாப்பு குழு திரு எஸ்.பி. ராஜா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற முகாம் இனிதே நிறைவுப்பெற்றது.

 

 

Post a Comment

புதியது பழையவை