விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரமான ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
வீர ஆஞ்சநேயரை தரிசிக்க செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வீர ஆஞ்சநேயரை தரிசித்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்குள்ள இராஜகிரி கோட்டை மற்றும் இராணிக்கோட்டையினுள் உள்ள தர்பார் மற்றும் அந்தப்புர மண்டபங்கள், கல்யாண மஹால், குதிரை லாயம், நெற்களஞ்சியம், பீரங்கிகள், பூங்கா என பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர்.
கோட்டையை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் அங்குள்ள ஆலமர விருதுகளில் ஊஞ்சல் ஆடியும், பூங்காவில் பச்சகுதிரை, கபடி மற்றும் கோகோ என பல விளையாட்டுகளை விளையாடி தங்களின் ஆங்கில புத்தாண்டின் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
கருத்துரையிடுக