விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மத்திய அரசு நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து 01.01.2022 முதல் இந்த முறை அமலுக்கு வந்தது..
இதற்காக விவசாயிகள் www.tncsc.tn.gov.in, www.tncsc-edpc.in என்ற இணையதளங்கள் வாயிலாகவோ அல்லது இ-சேவை மையத்தின் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்; ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்ற ஆவணங்களுடன் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு முறையில் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கருத்துரையிடுக