விழுப்புரத்தில் மார்ச் 28, 29 தேதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான, இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு நிதியாண்டு புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2022 - 23 -ம் நிதியாண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் 28/03/2022 , திங்கள் மற்றும் 29/03/2022, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் (புதிய கட்டிடம்) (மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில்) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளவர்கள் மார்ச்-28, 29 இவ்விரு நாட்களில் நடைபெற உள்ள இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாமில்
கீழ் கண்ட ஆவணங்கள்;
* மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல்,
* மார்பளவு புகைப்படம் 2,
*இலவச பேருந்து பயண அட்டை அசல் மற்றும் நகல், ஆகியவைகளுடன் கலந்துகொண்டு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பித்து பயனடைந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக