தமிழகத்தில் பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் மாசி 23 நாள் (07/03/202) திருத்தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா மாசி 17 ம் நாள் (மார்ச் -1) கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் இவ்விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 2ம் நாள் மார்ச் 2ம் தேதி மயானகொள்ளையும், 5ம் நாள் மார்ச் 5ம் தேதி தீமிதி திருவிழாவும், 7ம் நாள்(மாசி 23ம் நாள்) மார்ச் 7ம் தேதி விழாவின் கருவான ஒவ்வொரு ஆண்டும் புதியதாக உருவாக்கக்கூடிய பாடை தேர் என்று சொல்லக்கூடிய பச்சை மரங்களை கொண்டு புதியதாக செய்த திருத்தேர் வடம்பிடித்தல் உற்சவம் நடைபெற்றது. அன்று காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வருகை தந்தவாறு இருந்தனர். விழாவினை முன்னிட்டு காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்து தீபாராதனை ஏற்றப்பட்டது.
தொடந்து மாலை 3 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் திருத்தேரில் பாம்பை, உடுக்கை, நாதஸ்வர மேளதாளத்துடன் பக்தர்களின் அங்காளம்மனுக்கு அரோகரா, கோவிந்தா கோஷத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்து மாடவீதியாக தேர்நிலையை வந்தடைந்தது.
அம்மனுக்கு காணிக்கையாக பக்தர்கள் தங்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த காய்கறிகள், மணிலா, நெல் உள்ளிட்ட தானியங்கள் மற்றும் ஆடு,கோழி மற்றும் சுண்டல், கொழுக்கட்டை தேர்மீது வீசியும் காளி, சிவன், குறத்தி போன்ற வேடங்கள் அணிந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டார்.
திருத்தேர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு மோகன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா, தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் சுமார் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் . மேலும் தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவினை இந்த சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பக்தர்கள் மற்றும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கருத்துரையிடுக