இப்போதெல்லாம்
ஹெல்மெட் அணிவதற்குக் கூட போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் போடுவதைப் பார்க்க
முடியும். புதிய போக்குவரத்து விதிகளின்படி, நீங்கள் ஹெல்மெட்
அணிந்திருந்தாலும், உங்களிடம்
அபராதம் விதிக்கப்படும்.
புதிய விதிமுறை
புதிய போக்குவரத்து விதிகளின்படி, மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் ஓட்டும் போது ஹெல்மெட் ஸ்டிரிப் அணியாமல் இருந்தால், விதி 194D மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன், உங்கள் ஹெல்மெட் மோசமாக இருந்தாலோ, அல்லது BIS முத்திரை இல்லாமல் இருந்தாலோ; நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
ஹெல்மெட்
அணிந்த பிறகும், புதிய
விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த
வேண்டியிருக்கும். நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க, போக்குவரத்து விதிகளை அரசு
கடுமையாக்குகிறது.
எப்படி தெரிந்துகொள்வது? அபராதத்தை
உங்களுக்கு
அபராதம் விதிக்கப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://echallan.parivahan.gov.in) பார்வையிடலாம். அதில் நீங்கள்
உங்கள் அபராதத்தை குறித்தும், அதன் ஸ்டேடஸ் குறித்தும் சரிபார்க்கலாம். அதில், சலான் எண், வாகன எண் மற்றும் ஓட்டுநர் உரிம எண் என்ற ஆப்ஷன்கள் இருக்கும்.
உங்கள் வாகன எண்ணைத் உள்ளீடு செய்து அனைத்து விவரங்களையும் நிரப்பவும். இதற்குப்
பிறகு, உங்கள்
அபராதத்தின் ஸ்டேடஸை பார்ப்பீர்கள்.
புதிய
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால்,
20,000 ரூபாய்
வரை அபராதம் விதிக்கப்படும். இதையெல்லாம் தவிர்த்து, அவ்வாறு செய்தால் டன்னுக்கு ரூ.2,000 கூடுதலாக அபராதம்
விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக