விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடுவனந் தல் கிராம குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் இன்று 17 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் காலை மூலவர் அங்காளம்மனுக்கு பால்,தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகத்துடன் சந்தன காப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து அம்மன் 32 கரங்களுடன் ஆவேச அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் அங்காளியாய் அமர்ந்து. பூம்பாறை, காளி வேஷம், சிவன், பார்வதி, பாவாடைராயன், ஆண்பூதம், பெண்பூதம், குறத்தி வேடத்துடன் பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், நையாண்டி மேளம் இசைக்க பக்தர்கள் நடனமாடியபடி மயானத்திற்கு சென்றனர்.
மயானத்தில் மண்ணால் உருவாக்கப்பட்ட வல்லாளகண்டன் உருவ பொம்மை முன்பு கொழுக் கட்டை, சுண்டல், தானியங்கள், காய்கறிகள் படையலிட்டு அங்காளி ஆவேசத்துடன் மயான கொள்ளை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். பொது மக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக