தீவனூர்: சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் பிரசித்திபெற்ற ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இன்று மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டும் 108 சங்காபிஷேகமும், யாகசாலை வேள்வியும், தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரால் மூலவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு தீபாராதனை ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வந்து ஊஞ்சல் சேவையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாலாட்டு பாடி ஊஞ்சல் அசைத்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் சகுந்தாலாம்மாள், அறங்காவலரின் அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் செய்திருந்தனர்
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக